கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் இடி மின்னலுடன் குளிர்வித்த கோடை மழை!



கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல்-கோபாலப்பட்டிணத்தில் இடி, மின்னல், காற்றுடன் நேற்று நள்ளிரவு திடீரென்று பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதுடன் சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெயில் கொடுமையால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனா். பகல் முடிந்து மாலைப்பொழுது ஆகியும் பகலில் அடித்த வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தணியாத இரவையே பொதுமக்கள் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென்று இடியுடன் மழை பெய்தது.

வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்பொழுது நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் நிறையும் என ஏக்கத்துடன் கோபாலப்பட்டிணம் மக்கள் உள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments