ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06037) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை சனிக்கிழமை தோறும் இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, 2.50 மணிக்கு திருநெல்வேலிக்கும், இரவு 8.10 மணிக்கு திருச்சிக்கும், இரவு 10.05 மணிக்கு திருவாரூருக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06038) ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.
இந்த ரெயில்கள் இருமார்க்கத்திலும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஏசி, படுக்கை வசதிகள் உள்பட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.