பட்டுக்கோட்டையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வங்கியில் பணம் எடுத்தார்
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதம்பை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 41). விவசாயி. நேற்று முன்தினம் பாலன் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள அரசு வங்கியில், தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை விவசாய தேவைக்காக எடுத்துள்ளார். இந்த பணத்தை தனது ஸ்கூட்டி வாகனத்தில் வைத்து பூட்டிக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றார்.
ரூ. 2லட்சத்து 18 ஆயிரம் திருட்டு
இந்நிலையில் மேலும் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே பணம் எடுக்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் பாலனின் ஸ்கூட்டியை உடைத்து அதில் இருந்த ரூ. 2லட்சத்து 18 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வங்கியில் பாலன் பணம் எடுக்க சென்ற போது மர்ம நபர் ஒருவர் மாஸ்க் அணிந்தவாறு பாலனின் பின்புறம் வந்து நின்றார்.
கண்காணிப்பு கேமரா
பாலன் பணம் எடுத்ததை அறிந்த, அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மேலும் ஒரு நபருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று பணத்தை திருடி சென்றது அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.பட்டுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் 2 நபர்கள் ஸ்கூட்டி வாகனத்தை உடைத்து, அதில் உள்ள பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.