மணமேல்குடி ஒன்றியத்தில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஒரு நாள் குறுவள மைய பயிற்சி!





மணமேல்குடி ஒன்றியத்தில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு  கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஒரு நாள் குறுவள மைய பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட   மணமேல்குடி 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணமேல்குடி வட்டார வள மையம் ஆகிய இரு மையங்களில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு கற்பிக்கின்ற தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் குறுவள மைய பயிற்சியினை மணமேல்குடி வட்டார வள மையத்தில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தொடக்கநிலை சண்முகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் செழியன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இப்பயிற்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பேசுகையில் கூறியதாவது, மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநல சார்ந்த தகவல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும்,பெண் குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும்  இப்பயிற்சியில் உடல் நலம் ஆரோக்கியம் மற்றும் சிறப்பு வாய்ந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறைகள் குறித்த சிறப்பு பயிற்சிகள்  மாணவர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி முறைகள்  குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இப்பயிற்யினை கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர்கள்  பாக்கியம், ஜெகதீஸ்வரி கண்ணன், வேம்பரசி, ராணி மற்றும் ஆசிரியர் ஜான் பீட்டர்  ஆகியோர் செயல்பட்டனர்.

இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி, அங்கயற்கன்னி மற்றும் சிறப்பாசிரியர்கள் மணிமேகலை,கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments