குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி கடைத்தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு, நடு மாடு, பெரிய மாடு, கரிச்சான் மாடு, நடுக்குதிரை என பல்வேறு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.
பரிசு
நடுக்குதிரையில் 11 குதிரை வண்டிகளும், சின்னமாடு, பெரிய மாடு பிரிவில் 12 மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 22 மாட்டு வண்டிகளும் பந்தயத்தில் கலந்து கொண்டன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டிகளுக்கு ரொக்கம், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை, மாட்டு வண்டிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பந்தயத்தை திரளான பொதுமக்கள் சாலை நெடுகிலும் நின்று கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை கட்டுமாவடி, செம்பியன் மகாதேவிப்பட்டினம், கணேசபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
9 பேர் மீது வழக்கு
இதையடுத்து அனுமதியின்றி பந்தயம் நடத்தியதாக மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த முருகேசன், ராஜாராம், கார்த்திக், மருதமுத்து, ஹரிஹரசுதன், இளையராஜா மற்றும் செம்பியன் மகாதேவி பட்டினம் பகுதியை சேர்ந்த முரளி, ராமர், சங்கரன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.