அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி




அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேல் பாதி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மகன் சின்ன கருப்பன் (வயது 11). இவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வதற்காக கடையில் விநாயகர் சிலையை வாங்கிக்கொண்டு நேற்று வீட்டிற்கு வந்தார்.

மின்சாரம் பாய்ந்து பலி

தொடர்ந்து வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, அதற்கு மின்சார விளக்கு அமைத்து கொண்டிருந்தார். அப்போது சின்னகருப்பன் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கிசிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சின்னகருப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments