மோட்டார் சைக்கிள் விபத்தில் கீேழ விழுந்த வாலிபர், காரின் பம்பரில் சிக்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 32) மற்றும் சூரிய பிரகாஷ் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தை நோக்கி வந்தனர்.
இதே போல் கிழக்குக் கடற்கரை சாலையை நோக்கி மருதன்தோப்பை சேர்ந்த பாண்டி (54), அவருடைய மனைவி ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
முனீசுவரன் கோவில் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேற்கண்ட 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த கார், கீழக்கரை சம்சுதீன் மீது மோதியது. இதில் கார் முன்புறம் உள்ள பம்பரில் சம்சுதீன் சிக்கி கொண்டதாக தெரிகிறது. இதனை கவனிக்காத கார் டிரைவர் ஹமீது அலி(62), காரை தொடர்ந்து இயக்கியுள்ளார்.
இழுத்து செல்லப்பட்டார்
இதனால் காரில் சிக்கிய சம்சுதீன், கீழக்கரை-ஏர்வாடி முக்கு ரோடு வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது. சாலையில் சென்றவர்கள் இதை கவனித்து, காரை நிறுத்தும்படி கூச்சலிட்ட பிறகே டிரைவர் ஹமீது அலி கவனித்து நிறுத்தியதாக தெரியவருகிறது.
பம்பரில் சிக்கி படுகாயம் அடைந்த சம்சுதீனை கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் ஹமீது அலி மற்றும் பாண்டி மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.