ஆவுடையார்கோவில் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் மற்றும் அறந்தாங்கி அலிஜெனம் அரபி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எஸ்.டி.ராமசந்திரன் வழங்கினார்.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரன் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
ஒன்றியக் குழு தலைவர் உமாதேவி, ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா, கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் இளையராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா, உறுப்பினர்கள் குமார்,சிவகாமி, வார்டு உறுப்பினர் பானுமதி, முத்து, பாண்டியன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும், பெற்றோர்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
100 மாணவர்களுக்கும், 97 மாணவிகளுக்கும் மொத்தம் 197 விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இறுதியில் முதுகலை தமிழாசிரியர் குமார் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக அறந்தாங்கி அலிஜெனம் அரபி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அறந்தாங்கி காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் நகரத் தலைவர் வீராசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அறந்தாங்கி ஜமாத்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.