புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
மணல் குவாரிகள்
தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக அரசு மணல் குவாரிகளிலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு சோதனை தொடங்கியது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ள அளவை பார்வையிட்டனர். இந்த தொடர் சோதனையின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
தொழில்நுட்ப கருவி மூலம் அளவீடு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்த குவாரி தற்போது இயங்கவில்லை. இந்த மணல் குவாரியில் சோதனையிட நேற்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் வந்தனர். அவர்கள் குவாரியில் மணல் தோண்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் மணல் தோண்டப்பட்ட அளவை கணக்கிட்டனர். மேலும் டிரோன் மூலமும் மணல் குவாரியின் பரப்பளவை கணக்கிட்டு, எந்தெந்த இடத்தில் மணல் தோண்டப்பட்டுள்ளது, எவ்வளவு ஆழத்தில் தோண்டப்பட்டிருக்கிறது என்பதை கணக்கிட்டனர். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் வல்லுனர்களும் உடன் வந்திருந்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்
இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே ஆமாஞ்சி, மணமேல்குடி அருகே பானாவயல் ஆகிய இடங்களில் வெள்ளாற்றில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று காலையில் தொடங்கி மாலையில் முடிவடைந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் சிலுப்பனூர் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்காக 5 கார்களில் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை வந்தனர். பின்னர் டிரோன் மூலம் மணல் குவாரியை ஆய்வு செய்தனர். மேலும் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆற்றின் பல எல்லைகளில் டேப் வைத்தும், நவீன கருவி மூலமும் அளந்து கணக்கிட்டனர்.
இதில் அனுமதிக்கப்பட்ட 4.800 கன மீட்டரை விட அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பிட்ட ஆழத்தைவிட 10 முதல் 15 அடிவரை அதிக ஆழம் தோண்டி மணல் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது. சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்
இதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வெள்ளாறு மணல் குவாரியில் டிரோன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அரசு அறிவித்ததை விட கூடுதல் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதா?, உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுகிறதா? என்று அமலாக்கத்துறையினர் டிரோன் மூலமும், நவீன கருவி மூலமும் 4 மணி நேரம் சோதனை செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.