விசைப்படகு
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். மீனவர் ஒருவர் வலையில் 4 பெரிய கூரல் மீன்கள் சிக்கி இருந்தன. அந்த 4 மீன்கள் 95 கிலோ எடை இருந்தது.
ரூ.6 லட்சத்திற்கு கூரல் மீன்கள் ஏலம்
இந்நிலையில் மீனவர் வலையில், கூரல் மீன்கள் சிக்கிய செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் கூரல் மீன்களை வாங்க வியாபாரிகள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தலத்திற்கு வந்தனர். தொடர்ந்து அங்கு பிடித்து வரப்பட்ட கூரல் மீன்கள் ஏலம் விடப்பட்டன.
ஏலத்தில் பல வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் கூரல் மீன்கள் ரூ.6 லட்சத்திற்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தையல் போட பயன்படுகிறது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், கூரல் மீன்கள் பொதுவாக கரைப்பகுதியில் கிடைப்பது இல்லை. இந்த வகையான மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலேயே அதிகமாக கிடைக்கும். என்றைக்காவது நமது கடல் பகுதியில் ஒரு சில கூரல் மீன்கள் சிக்குகின்றன. இந்த மீன்கள் பொதுவாக உணவுக்காக பயன்படுத்துவது மிகவும் குறைவு. இந்த மீன் இவ்வளவு விலை போக காரணம், இந்த மீனின் வயிற்று பகுதியில் ஒருவகையான குடல் போன்ற பகுதி காணப்படும். அதனை நெட்டி என்று அழைப்பார்கள். இந்த நெட்டியானது மருத்துவத்துறையில் பெரும் பங்காற்றுகிறதாக கூறப்படுகிறது. இதய அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு தையல் போட பயன்படுத்தப்படும் நூல் இந்த நெட்டியில் இருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். அதனாலேயே இந்த நெட்டிக்கு அதிக விலை போகிறது என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.