மணமேல்குடி அருகே பி.ஆர்.பட்டிணத்தில் மீனவர் பொதுநல மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் கலந்து கொண்டு மன்றத்தை திறந்து வைத்தார். இதையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 படகுகள் கலந்து கொண்டன. போட்டியில் ஒரு படகுக்கு 6 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். ஒரு படகில் ஒரு பாய், ஒரு பலகை மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகளோடு நடத்தப்பட்டது. மேலும், படகு புறப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தூரம் படகுகள் சென்று வர வேண்டுமென தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படகுகளை செலுத்தினர்.
இதையடுத்து, படகு போட்டியில் கலந்து கொண்டு முதல்பரிசை பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை ஈஸ்வரன் அணியினருக்கு ரூ.35 ஆயிரமும், 2-ம் பரிசாக ராமநாதபுரம் நம்புதளை ஆறுபடை அணியினருக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ராமநாதபுரம் தொண்டிபுதுக்குடி கருப்பையா ரத்தினவேல் அணியினருக்கு ரூ.20 ஆயிரமும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. விழாவில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். படகு போட்டியை தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.