தலைநகர் சென்னையில் முதல் 'யு' வடிவ மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!




சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 'யு' வடிவ மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய கைலாஷ் பகுதியில் 'எல்' வடிவதிலும் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் 'யு' வடிவத்திலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 'யு' வடிவ மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 450மீ நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'யு' வடிவ மேம்பாலத்தில் 40 அடி இடைவெளியில், 20 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த பாலம் சென்னையில் கட்டப்பட்டுள்ள முதல் 'யு' வடிவ மேம்பாலம் ஆகும். இந்த பாலத்தின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments