திருவாடானையில் கிராம மக்கள் முயற்சியால் நிரம்பிய குளம்




திருவாடானை அரசு கல்லூரி அருகில் மங்களநாதன் குளம் உள்ளது. இந்த குளம் திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் குளிப்பதற்காக பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்தது. மேலும் நீர்வரத்து தடைப்பட்டது. இதையடுத்து இப்பகுதி மக்கள் குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்த்து குளம் முழுமையாக நிரம்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் தற்போது திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், திருவாடானை நகர் வளர்ச்சி குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சூச்சனி கிராம மக்களின் ஒத்துழைப்போடு சூச்சனி கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் இருந்து குழாய்கள் அமைத்து மங்களநாதன் குளத்திற்கு கடந்த சில தினங்களாக தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தனர். இதனால் தற்போது மங்களநாதன் குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குளம் நிரம்பி காட்சியளிப்பதால் திருவாடானை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த குளம் நிரம்புவதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments