புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண் கருவிழி பதிவு
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் `ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை முனைய கருவிகளின் மூலம் கைரேகை பதிவு செய்யப்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கான மாதாந்திர பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் ஒருவர் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சிலரது கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் சிரமம் அடைவதும், கைவிரல் பதிவில் பயோமெட்ரிக் எந்திரம் சில நேரங்களில் பழுதாவதுமாக இருந்து வருகிறது. இதனால் கைரேகை பதிவுக்கு பதிலாக கண் கருவிழி பதிவு வசதி முதல்கட்டமாக குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ரேஷன் பொருட்களுக்கு பில்
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 30 ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வருபவர்களில் குடும்ப அட்டை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது கண் கருவிழியை அந்த ஸ்கேன் கருவியில் காண்பித்து பதிவு செய்கின்றனர். இதில் அவர்களது விவரம் வந்ததும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு தற்போது பில்லும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.