மணமேல்குடி ஒன்றியத்தில் மும்பாலை குடியிருப்பில் உள்ள புதிய பாரத கற்றல் மையம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையம் ஆகிய கற்றல் மையங்களை அறந்தாங்கி கல்வி மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் பார்வை.




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் மும்பாலை  பஞ்சாயத்தில் உள்ள மும்பாலை புதிய பாரத எமுத்தறிவு கற்றல் மையம் மற்றும்  இல்லம் தேடிக் கல்வி  மையம் ஆகிய இரண்டு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள்  பார்வையிட்டார்.

பார்வையின் போது புதிய பாரத கற்போரிடம் வாசித்தல் , பெயர் எமுதுதல் மற்றும் ஊர் பெயர் எழுத போன்ற செயல்பாடுகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மாணவர்களின் வாசித்தல் எழுதுதல் போன்ற திறன்களை கேட்டறிந்தார்கள்.

 இல்லம் தேடிக் கல்வி மையத்தின் செயல்பாடுகளையும் , மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் எழுதுதல் எழுத்துக்களை எழுத வைத்தல் வாசிக்க வைத்தல் போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார்கள்.  

 பார்வையின் சமயம் மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி பள்ளித் துணை ஆய்வாளர்  இளையராஜா மணமேல்குடி 
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி ஆசிரியர் பயிற்றுநர் அங்கையர் கன்னிகணக்காளர் கலைச் செல்வன் தன்னார்வலர் சத்யா 
 ஆகியோர் உடன் இருந்தனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments