மணமேல்குடி வர்த்தக நலச்சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்




தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் பலர் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வர்த்தக நலச்சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சங்க தலைவர் கணேசன் மற்றும் வர்த்தக நலச்சங்க நிர்வாகிகள் மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, வருவாய் ஆய்வாளர் ராஜாவிடம் வழங்கினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments