ஆபத்தான இராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி! உடனடியாக இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு! -




ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் முற்றிலும் சுங்கச்சாவடி அகற்றி அப்புறப்படுத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் சாலையில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அகற்ற வேண்டும் என மனுதாரரின் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு:

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு,

இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செம்படையார் குளம், பெருங்குளம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி பயனற்ற நிலையில் உள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments