அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்





 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாப்பாடி  கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு  என ஐந்து  பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சை, இராமநாதபுரம்  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி ஜோடிகள் துள்ளிக்குதித்து  ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள்  சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர். மேலும் இந்த பந்தயத்தில்  முதல் மூன்று  இடங்களை பிடித்த மாட்டுவண்டி  உரிமையாளர்களுக்கு   ரூபாய் 2 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும்   வழங்கப்பட்டது.
மணமேல்குடி காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments