வெளியூர் மரண அறிவித்தல்:- கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரஹ்மான் அவர்கள்



கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரில் குடியிருந்து வரும் சொரக்கா வீட்டு மர்ஹும்.முகமது ஹனிபா அவர்களின் மகனும், மீமிசல் ஹமீதியா மெடிக்கல் உரிமையாளர் ஹாரிஸ் அவர்களின் தகப்பனாருமான கலீல் ரகுமான் அவர்கள் இன்று 29/01/2024 திங்கட்கிழமை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-01-2024) திங்கட்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளி அருகில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்: ரஹ்மத் நகர் பள்ளிவாசல் அருகில், கோட்டைப்பட்டினம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments