துபாய் செல்ல இந்தியர்களுக்கு 5 ஆண்டு மல்டிபிள் என்ட்ரி விசா - துபாய் அரசு அறிவிப்பு ! Dubai's 5-yr multiple-entry tourist visa for Indians




இந்தியாவில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை வரவேற்க்க 5 Year Multiple Entry Visa வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் 90 நாட்கள் தங்கலாம். இதை அதிகபட்சம் 180 நாட்கள் வரை நீட்டித்து கொள்ளலாம். ஓராண்டில் 180 நாட்களுக்கு மேல் இந்த விசாவை பயன்படுத்த முடியாது. மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம். அங்கிருந்து திரும்பி இந்தியா வரலாம். என்று துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த 5 ஆண்டுகள் மல்டிபிள் என்ட்ரி விசா மூலம் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் துபாய்க்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விசா உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments