மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்த KSR பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறைக்கு இருமார்க்கங்களிலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது
மைசூர் - மயிலாடுதுறை
இந்த ரயில் மைசூரில் இருந்து தினமும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைகிறது.
மயிலாடுதுறை - மைசூர்
மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை இருந்து இந்த ரயில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு மைசூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது. .
இந்த ரயிலை இரு மார்க்கங்களிலும் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்
அதனை தொடர்ந்து, ரெயில்வேயின் பரிந்துரைப்படி மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழி சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்து இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
நிறுத்தங்கள்
இந்த ரெயில் மயிலாடுதுறை- கடலூர் துறைமுகம் இடையே சீர்காழி சிதம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கடலூர் மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.