நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
பணம், பொருட்கள் பறிமுதல்
அதாவது ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் பணம், பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 19-ந்தேதியே தேர்தல் முடிந்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தேர்தல் முடியாததால், தேர்தல் விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் வணிகர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் வழிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மறு வாக்குப்பதிவு
இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி இதுவரை எங்களிடம் எந்த கோரிக்கையும் வரவில்லை. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், தேர்தல் பொதுப்பார்வையாளரும் முடிவு செய்து பரிந்துரைக்க வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே தேர்தல் கமிஷன் உரிய அறிவிப்பை வெளியிடும். ஆனால் இதுவரை அதுபோன்று மறு வாக்குப்பதிவுக்கான பரிந்துரை எதுவும் தேர்தல் கமிஷனுக்கு சென்றதாக தகவல் இல்லை.
எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா? என்பதை தேர்தல் கமிஷன்தான் அறிவிக்க முடியும். இதுவரை அதுபற்றிய தகவல் இல்லை.
பறக்கும் படை கலைப்பு
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டு விட்டன.
தேர்தல் நடைபெற உள்ள பக்கத்து மாநில எல்லையை ஒட்டியுள்ள திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருப்பத்துார், திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனை இருக்கும்.
171 குழுக்கள்
அந்த 13 மாவட்டங்களிலும் மொத்தம் 69 பறக்கும்படைகளும், 102 நிலையான கண்காணிப்பு குழுக்களும் சேர்த்து மொத்தம் 171 குழுக்கள் சோதனை மேற்கொள்ளும். நிலையான கண்காணிப்பு குழுவினர், பக்கத்து மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை மேற்கொள்வார்கள். அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும், அவற்றின் எல்லையில் உள்ள பறக்கும்படைகள் திரும்பப் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், எல்லை மாவட்டங்களைத் தவிர மற்ற 25 மாவட்டங்களில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்து செல்ல முடியுமா? என்று கேட்டபோது, பறக்கும்படை சோதனை அங்கு இல்லாவிட்டாலும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில்தான் உள்ளன என்று சத்யபிரத சாகு பதில் அளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.