புதுக்கோட்டை அருகே அன்னவாசலில் தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்






புதுக்கோட்டை அருகே அன்னவாசலில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறைக்கு தனியார் பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை இலுப்பூர் அருகே ஆரியக்கோன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் யுவராஜ் (வயது 27) என்பவர் ஓட்டினார். புதுக்கோட்டை அருகே அன்னவாசல் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினர். சிலர் பஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இதற்கிடைேய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பஸ்சில் இருந்து வெளிேயறி தப்பி சென்று விட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் மணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடைேய இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, தாசில்தார் சூரியபிரபு, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் லதா, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம், தி.மு.க. நகர செயலாளர் முகமது ரிஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

30 பேர் படுகாயம்

இதையடுத்து படுகாயமடைந்த அன்னவாசலை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மதன்குமார் மனைவி கர்ப்பிணியான பிரியா (24), காலாடிப்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் விஸ்வநாதன் (16), மோகன்ராஜ் (14), முத்துலட்சுமி (40), பாண்டியன் (19), கவுசல்யா (28), மாரியாயி (65), பிரகாஷ் (24), லட்சுமணன் (20), ரம்ஜான் (45), ரேவதி (35), சக்தி (65), நரேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர் களை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments