திருவாரூர்-காரைக்குடி ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் வலியுறுத்தல்




திருவாரூர்-காரைக்குடி ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மானாமதுரை வரை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை நகர்குழு மற்றும் தொழிற்சங்க கூட்டு குழு கூட்டம் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் வக்கீல் மருது, மாவட்டகுழு உறுப்பினர் கங்கை சேகரன், நகர துணைசெயலாளர் சகாயம், பாண்டி, மாதர் சங்க பொறுப்பாளர்கள் குஞ்சரம், ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

திருவாரூர்-காரைக்குடி ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியில் குப்பைகள் கொட்ட தனி இடம் அமைக்க வேண்டும். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் உடனடியாக எக்கோ மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை செய்ய டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும்.

பஸ்கள் இயக்க வேண்டும்

பழைய ஆஸ்பத்திரி அருகே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும். சிவகங்கையில் இருந்து மதுரை, மானாமதுரைக்கு இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் கிடையாது. எனவே, இரவில் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments