புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாயில் கருப்பு துணி
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், அடிப்படை பணியாளர் முதல் தாசில்தார் வரை கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும், சங்கத்தினர் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வாயில் கருப்பு துணி கட்டி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு நிற முக கவசம்
புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் பரணி முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல இச்சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் வாயில் கருப்பு துணி மற்றும் கருப்பு நிற முக கவசம் அணிந்து நேற்று பணியாற்றினர்.
ஆலங்குடி
ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டத்தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். பின்னர் ஒரு நாள் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அலுவலக பணியில் ஈடுபட்டனர். முடிவில் வட்ட செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.