அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் பொழுது இரவில் மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதிப்பட்டனா்.
மின்விளக்குகள் எரியவில்லை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து ரெயிலில் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.
இருப்பினும் ரெயில் நிலையத்தில் இரவில் மின்விளக்குகள் எரிவது கிடையாது. நேற்று இரவு காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரெயில் அதிராம்பட்டினம் வழியாக வந்த போது ரெயில் நிலையத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவு நேரம் என்பதால் பயணிகள் ரெயிலை விட்டு பிளாட்பாரத்தில் இறங்கும் போது தடுமாறி சென்றனர்.
அடிப்படை வசதிகள்
இது குறித்து பயணிகள் கூறியதாவது:- ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சிறிதும் கிடையாது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். இரவு நேரத்தில் ரெயிலை விட்டு பிளாட்பாரத்தில் இறங்கும் போது மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதி இருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு ரெயில் நிலையம் உள்ளது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.