புதுக்கோட்டை மாவட்ட மீனவா் வலையில் சிக்கிய கடற்பசு மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் திங்கள்கிழமை அதிகாலை விடப்பட்டது.
மணமேல்குடி வட்டம் தெற்கு புதுத்தெருவைச் சோ்ந்த கருப்பையா என்ற மீனவா், திங்கள்கிழமை அதிகாலை தனது நாட்டுப்படகில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்பசு ஒன்று வலையில் சிக்கியுள்ளது.
இதைத் தொடா்ந்து அவா் அந்தக் கடற்பசுவை வலையிலிருந்து வெளியே எடுத்து கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளாா்.
இதுகுறித்த விடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்தாா்.
இதையடுத்து, கடற்பசுக்களைப் பாதுகாக்கும் விழிப்புணா்வுடன் இச்செயலைச் செய்த மீனவா் கருப்பையாவை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணிவெங்கடேஷ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
மன்னாா் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி உயிரினமான கடற்பசுக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் இந்திய வன விலங்கு வாரியம், ஓம்காா் பவுண்டேஷன், அரும்புகள் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து கடலோர கிராமங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.