புதுக்கோட்டை மாவட்டம் – ஆவுடையார் கோவில் தாலுகா, மீமிசல் - கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பரக்கத் நிஷா (தந்தை: அப்துல் முனாப்) அவர்களின் வீடு இன்று ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை தாக்கத்தால் இடிந்து சேதமடைந்துள்ளது.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் வீடு இடிந்ததால், இந்தக் குடும்பம் தங்கும் இடம் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், ஆவுடையார் கோவில் தாலுகா வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரடியாக வருகை தந்து, போர்க்கள அடிப்படையில் உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
புயல் பாதிப்பு காரணமாக அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக அவசியமாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.