ஆற்றங்கரை ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் மரகத பூஞ்சோலை பூங்கா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்




முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை மற்றும் அச்சடிப்பிரம்பு ஊராட்சிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்காக்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பூங்காவில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், தாட்கோ துறை செயற்பொறியாளர் பச்சவடிவு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், மண்டபம் யூனியன் ஆணையாளர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன்தங்கம், ஆற்றங்கரை ஊராட்சிமன்ற தலைவர் முகம்மது அலி ஜின்னா, துணைத்தலைவர் நூருல் அபான், தாட்கோ துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரதாரு, மண்டபம் வனசரக அலுவலர் நித்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments