தொண்டி அருகே கடலுக்குள் மூழ்கிய படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள்




தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடியைச் சேர்ந்த மீனவர் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 மீனவர்கள் கடந்த 21-ந்தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அன்று இரவில் கடலில் காற்று அதிகமாக வீசியதால் அலையின் தாக்கம் காரணமாக படகில் கடல் நீர் புகுந்தது. மேலும் படகின் பலகைகள் சேதம் அடைந்து கடல் நீர் உள்ளே புகுந்ததால் விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது. உடனே மூழ்கிய படகில் இருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அருகில் இருந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். அதை தொடர்ந்து மூழ்கிய படகை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. சோளியக்குடி லாஞ்சியடி மீனவ கிராமத்தில் கிராம தலைவர் காளிதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி சோளியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் சுமார் 5-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்சென்றனர். இதற்காக முத்துக்குளிக்கும் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை அழைத்து வந்து மூழ்கிய படகை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். பின்னர் 5 விசைப்படகுகள் மூலம் கயிறை கட்டி சுமார் 4 கடல் மைல் தூரத்திற்கு மூழ்கிய விசைப்படகை இழுத்து வந்து லாஞ்சியடி கடற்கரையில் சேர்த்தனர். கடலுக்குள் மூழ்கியதால் விசைப்படகு முழுமையாக சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments