கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி எம்எல்ஏ, எஸ்.டி.ராமசந்திரன் வழங்கினார்




புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இன்று 26.09.2024 வியாழக்கிழமை 47 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எஸ்.டி.ராமசந்திரன் வழங்கினார். 

கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமையாசிரியர்  தலைமையில் நடைபெற்றது.  

பள்ளி உதவி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரன் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்   இந்நிகழ்வில் கல்வி அலுவலர்கள் அனைத்து ஆசிரியர் பெருமக்களும், பெற்றோர்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments