புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று `நீட்' தேர்வு உள்ளிட்ட தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மருத்துவக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்ப கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி ஆகியவற்றில் இடம் பிடித்த 46 மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அருணா தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி வாழ்த்து தொிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், கோட், பொன்னாடை அணிவித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் `நீட்' பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. விழாவில் கலெக்டர் அருணா பேசுகையில், ``7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் பிடித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது எவ்வித இடையூறுகள் ஏற்படினும், அவற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு நீங்கள் உறுதி கொண்ட குறிக்கோளை அடைந்திட வேண்டும். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இரட்டை இலக்க எண்ணாக உள்ள சாதனை அடுத்த ஆண்டு மூன்று இலக்க எண்ணாக அதிகரிக்க வேண்டும்'' என்றார். இந்நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரமேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.