திருச்சி-சென்னை பசுமை வழி சாலை, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி கரூர் 6 வழிச்சாலை மற்றும் திருச்சி-காரைக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்
தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு மாநிலங்களில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் புணரமைப்பது குறித்த கூட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் நிதின் கட்கரி அறிவித்தார். அதில் திருச்சி-சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார். இதுமட்டுமல்லாமல் திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-கரூர் இடையேயான 2வழிச்சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும். அதேபோன்று திருச்சி காரைக்குடி இடையே 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரிவான திட்ட அறிக்கை
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பசுமை விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளி தீர்மானிக்கப்பட்ட நிலையில், திருச்சி வரை இருக்கும் என அமைச்சரே கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் சாலையில் அதிகரித்து வரும் வாகன நெரிசல், எதிர்கால வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வணிக மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புதிய விரைவுச் சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி தினமும் சுமார் 1.6 லட்சம் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதாக கூறப்படுகிறது.
4 மணி நேரத்தில் திருச்சி பயணம்
இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு இடையிலான தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் அடையும் விதமாக எக்ஸ்பிரஸ் அமைக்கப்பட உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.