வெளியூர் மரண அறிவித்தல் : செலியம்பட்டியை சேர்ந்த A.காஜா முயீனுத்தீன் முனீரி ஹஜ்ரத் அவர்கள்



கோபாலப்பட்டிணம் ஜம்ஜம் தெரு (பழைய காலனி தெரு) 1-வது வீதியை சேர்ந்த  மர்ஹூம்.சிலாங் முகம்மது அலியார் அவர்களின் மருமகனும், ஜலிமுல்லா, அகமது கபீர், GPM AUTO நெய்னா முகம்மது ஆகியோரின் மச்சானும், புதுக்கோட்டை ஹிக்மதுல் பாலிஃகா அரபுக் கல்லூரியின்  துணை முதல்வர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பிரான்மலை அருகே செலியம்பட்டியை சேர்ந்த A.காஜா முயீனுத்தீன் முனீரி ஹஜ்ரத் அவர்கள் வபாஃத் ஆகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 27-12-2024 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு செலியம்பட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments