கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகத்தின் அதிரடி எச்சரிக்கை! தெருக்களில் கழிவுநீர் மற்றும் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் (ஆக.7) அகற்ற உத்தரவு!!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மற்றும் பொதுப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஜமாஅத் நிர்வாகம் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்தைப் பேணவும், ஊரின் முக்கியப் பாதைகளைச் சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜமாஅத் நிர்வாகம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்:

கழிவுநீர் மேலாண்மை
திறந்தவெளியிலும் தெருக்களிலும் கழிவுநீரை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவரவர் வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பாகத் தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாதைகளிலும் பொது இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள் சுய விருப்பத்தின் பேரில் அகற்றிட வேண்டும்.

நிர்வாகத்தின் இறுதி எச்சரிக்கை
வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்ததும், ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் நேரில் சென்று ஒட்டுமொத்தமாக ஆய்வு மேற்கொள்வார்கள். உத்தரவை மீறி கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊர் பொதுமக்களும் சுகாதாரம் மற்றும் பொது நலன் கருதி நிர்வாகத்தின் இந்த நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: ஜமாஅத் நிர்வாகம், கோபாலப்பட்டிணம்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments