இன்று (07-08-2026) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு, ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஊரின் ஒவ்வொரு வீதியாகச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தெருக்களில் கழிவுநீரைத் திறந்துவிடும் வீட்டாருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 13 வரை அவகாசம்
பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கழிவுநீர் தெருக்களில் தேங்காதவாறு தடுக்க பொதுமக்கள் சொந்த முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வரும் ஆகஸ்ட் 13 (வியாழக்கிழமை) வரை ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை எச்சரிக்கை
வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 14) தெருக்களில் கழிவுநீர் வெளியேறுவது தடுக்கப்படாவிட்டால், ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடும் ஒத்துழைப்போடும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறுபவர்கள் மீது ஊராட்சி அதிகாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்சார இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.