ஆவுடையார்கோவில் அருகே மோட்டாா் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் குமரப்பன் வயல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் மகன் வசந்த் (வயது 23), சுப்பிரமணியன் மகன் மனோஜ் (20). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நேற்று காலை அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவா்கள் மது குடித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் மீமிசல் அருகே உள்ள பொன்பேத்தி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்பு கட்டை மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே வசந்த் பரிதாபமாக இறந்தார்.
மற்றொருவர் படுகாயம்
இதையடுத்து படுகாயமடைந்த மனோஜை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்புனவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்புனவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.