மணமேல்குடி அருகே 7 பவுன் நகைகளை திருடிய பெண் கைது




மணமேல்குடி அருகே நெம்மேலிகாடு கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கத்தின் மனைவி ரஞ்சிதா (வயது 34). இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக அவர் மணமேல்குடி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த பழனிவேலின் மனைவி கீதா (37), நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கீதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடிய நகைகளை விற்ற இடத்தில் இருந்து கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments