அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36), லாரி டிரைவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே செய்யானம் கிராமத்தில் உள்ள வயல்களில் இருக்கும் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மனைவி பரமேஸ்வரி (25) கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை இளையராஜா பறிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போடவே ஆத்திரம் அடைந்த இளையராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையிலும், தலையிலும் சரமாரியாக குத்தி விட்டு தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இளையராஜாவை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.