புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1 கோடிேய 70 லட்சத்து 90 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை அறந்தாங்கி ஆர்.டி.ஓ. வழங்கினார்.
மீனவர்கள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மணமேல்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்சி மீனவளத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) குமரேசன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அப்போது மீனவர் கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மின்சார வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர். மீனவர்களின் கோரிக்கை உள்பட அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்து 90 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை ஆர்.டி.ஓ. வழங்கினார். மேலும் மாதம் தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்கள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம் எனவும், கூட்டத்தில் கோரிக்கை தொடர்பாக மனுக்களும் அளிக்கலாம். மேலும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற துறை அதிகாரிகள் அனைவரையும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.