5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்... கதறி அழுத போக்சோ குற்றவாளி




சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55), தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அந்த வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments