சதக்கத்துல் பித்ரு விளக்கம்




அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)

சதக்கத்துல் பித்ரு விளக்கம் 

ரஸீலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஃபித்ராவை உம்மத்தினர்கள் மீது கடமையாக்கி இருக்கிறார்கள் ஏனென்றால் பரிகாரம் (கஃப்பாரா) ஆகும்
(இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவுத்) 
நோன்பாளியிடம் வீண் செயல்கள் மற்றும் தவறுகளிலிருந்து தூய்மைபடுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாகவும் நபி ஸல் அவர்கள் நோன்பு பெருநாள் தருமத்தை கடமையாக்கினார் எவர் அதனைத் தொழுகைக்கு முன்பு கொடுத்து விடுவாரோ அது பெருநாள் தருமமாக ஏற்றுக்கொள்ளப்படும் என இப்னு அப்பாஸ் ரலி கூறினார்கள்
 (நூல் இப்னுமாகா) 

முஸ்லிமான ஆண், பெண் ,சிறியவர் ,பெரியவர் ஆகியோர் மீது நோன்பு பெருநாள் தருமத்தை கடமையாக்கி தொழுகைக்கு வெளியேறும் முன்பு அதனை கொடுத்துவிடுமாறு கட்டளையட்டார்கள்
(இப்னு உமர் ரலி நூல்: புகாரி ) 

ஹனபி மத்ஹபின் படி யாரிடம் 11.1/2 பவுன் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி அல்லது அதன் அளவு தொகை பெருநாள் அன்று இருக்குமோ அவர் தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் ஃபித்ரா கொடுக்க வேண்டும் .

ஷாபி மத்ஹபின் படி தன் செலவு போக பித்ரா கொடுக்கும் பொருளிருந்தால் தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் பித்ரா கொடுக்க வேண்டும்.

ஹனபி 2400 கி.கி அரிசி அல்லது அதன் கிரயம்
ஷாபி 3200 கி.கி அரிசி அல்லது அதன் கிரயம்

இன்ஷா அல்லாஹ் ஃபித்ரா பணத்தை மொத்தமாக சேகரித்து ஊரில் உள்ள ஏழை எளியோரை முறைபடி கணக்கெடுத்து கீழ்கண்ட பொருள்களை பெருநாள் தொழுகைக்கு முன்பே வழங்குவதற்கு சிறப்பான ஏற்பாடு செய்துள்ளோம். எனவே தங்களின் ஃபித்ரா தொகையை எங்களிடம் வழங்கி முறையாக ஏழைகளுக்கு ஃபித்ரா கிடைத்திட ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


பித்ரா பணம் வசூல் செய்பவர்கள்:

K.Y.N. சேக்காதி ராவுத்தர் (ஜமாத் துணை செயலாளர்) செல்: 9047246768
F. முஹம்மது இலியாஸ் செல்: 8012769334
N.M.A  ஜியாவுதீன் CELL: 9865557284
M.S. சுலைமான் CELL: 9952799093
M.K.R. முஹம்மது மீராசா CELL: 9865980034
K.N.L. ஹிதாயத்துல்லா CELL: 9750835604
J. சாதிக் பாட்சா CELL: 9865117999
M. முஹம்மது அலி CELL:7373453131


இவர்களை தொடர்பு கொண்டு பித்ரா பணத்தினை கொடுக்கவும்.
வெளிநாட்டில் உள்ளவர்களும் இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பித்ரா பணத்தினை கொடுக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இந்ந பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்படிக்கு 
இளைஞர் பேரவை,
கோபாலபட்டினம்.

Post a Comment

0 Comments