நமதூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்



ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 
சிறப்பு கிராமசபை கூட்டம் 
அன்பார்ந்த நாட்டாணி புரசக்குடி ஊராட்சி வாக்காளப் பெருமக்களே, மரியாதைக்குரிய தாய்மார்களே! நமது நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராமசபை கூட்டம் 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலபட்டினம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.  
   ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.முகம்மது மீராசா அவர்கள் தலைமையிலும் திருமதி.AR.ஜோதி அருணாராஜா அவர்கள், (ஒன்றியக் குழு உறுப்பினர்) திரு.J.முகம்மது இக்பால் அவர்கள், (ஒன்றியக் குழு உறுப்பினர்) திருமதி.K.காளீஸ்வரி காளிமுத்து அவர்கள் (ஒன்றியக் குழு உறுப்பினர்) ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. 

  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் இதர துறையைச்சேர்ந்த அலுவலர்களும் ஊராட்சி உறுப்பினர்கள், சுயஉதவிக்குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அச்சமயம் ஊராட்சி வாக்காளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தங்களது கருததுக்களை கூற அன்புடன் அழைக்கின்றோம். 
இப்படிக்கு 
உறுப்பினர்கள்:
 M.பஷீர் முகம்மது,                                     M. முகம்மது மீராசா ஊ.ம.தலைவர் 
 N.முகைதீன் பிச்சை,                                J.ருக்கியா அம்மாள் ஊ.ம.து.தலைவர் 
O.K பாத்திமா பீவி,                                               நாட்டாணி புரசக்குடி ஊராட்சி .
Y.ரகுமான் கான் S.வரிசை முகம்மது, 
A.மலர்நிஸா, V.காளியம்மாள் 
T.ரகுநாதன், T.ஜெயஸீலி, 
S.அப்துல் லத்தீப், M.ராமலிங்கம் 

கூட்டப்பொருள்

01.01.2012 ல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்



Post a Comment

0 Comments