எறும்புகளை பற்றிய அறிய தகவல்



1, அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும் , வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும் , ஆண் எறும்பு சில மாதமும் உயிர்வாழ்கின்றன . (பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது )

2, ஒரு எறும்பு கூட்டத்தில் ( கூட்டில் அல்லது புற்றில் ) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன
.

3, ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும் . அதே வேளையில் ராணி  இல்லாது எறும்பு இருப்பது இல்லை .

3, எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் ( 2 அங்குலம் ) வரை உள்ளன . 10000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம் , பங்கஸ் , தேன் என பல வகைகளில் அடங்கும் .

4, மிகவும் சிறந்த மோப்ப சக்தி ( வாசனை நுகரும் சக்தி ) , கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சுவாசப்பைகள் இல்லை .

5, எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன .

6, எறும்பு பற்றிய கற்றல் ( ஆராய்ச்சி ) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது .

7, எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .

8, உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட்டம் அமேசான் காட்டில் இருப்பதாக ஆராய்சிகள்  தெரிவிக்கின்றன .

9, மிகவும் திடகாத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள  எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது .

10, குடியிருப்பு இடங்களான நிலம் , மரம் , நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகசிறந்த உயிர் தப்பி  வாழும் ( SURVIVAL ) உயிரினங்களில் முக்கியமானதாகவும் உள்ளது .

11, எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு , தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு , தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள் .

Post a Comment

0 Comments