மணப்பாறையில் 18 ஆயிரம் ரூபாய் சில்லைரைக்கு பதில் உப்பு மூட்டை...!



திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ரெயில்வே சாலையில் ரஹ்மான் என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 18 ஆயிரம் ரூபாய் சில்லரை இருப்பதாக ஒருவர் கூறியதை அடுத்து கடையின் ஊழியர் சிவா 18 ஆயிரம் பணத்தை கொடுத்து மர்ம நபரிடம் மூட்டையை வாங்கி வந்து வைத்துள்ளார்.



பின்னர் இன்று காலை சில்லரை தேவைப்பட்டதால் மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் உப்பு பாக்கெட்டுகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில்லரை என்று உப்பை கொடுத்து ஏமாற்றியதை அறிந்த கடையின் உரிமையாளர்கள் கடையில் உள்ள சிசிடிவியை பார்த்த போது அதில் சில்லரை எனக்கூறி மூட்டையைக் கொடுத்த மர்ம நபர் அமர்ந்திருப்பது தெரியவந்தது.


சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில்லரை இருப்பதாக கூறி உப்புமூட்டையை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: .newstm தமிழ் 

Post a Comment