புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான குறுவள மைய அளவிலான (BRC) கலைத் திருவிழா போட்டிகள் குறித்த முன் திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த வெற்றியாளர்கள் மட்டுமே அடுத்த கட்டமான குறுவள மைய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவர். மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் கூட்டிச் செல்லும் முழுப் பொறுப்பும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையே சாரும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கட்டாயம் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும் என்பதோடு, குழுப் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும்போது ஓர் ஆண் ஆசிரியரும் ஒரு பெண் ஆசிரியரும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இப்போட்டிகள் 1, 2-ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 3 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு தனிப் பிரிவாகவும் நடத்தப்படும். இதேபோன்று அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தனியாக அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இப்போட்டிகளை முறைப்படி நடத்த ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இதில் மையத் தலைமை ஆசிரியர், உதவி அமைப்பாளர், மற்றொரு தலைமை ஆசிரியர், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
இக்கூட்டத்தில் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி, பெருமருதூர், அம்பலவாணனேந்தல், அம்மாபட்டினம் உள்ளிட்ட குறுவள மையங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.