வேலை தேடுவோர் கவனத்திற்கு! தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுகையில் நாளை நடக்கிறது



புதுக்கோட்டை  மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.   இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி  காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும்
நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (11ம் தேதி) அன்று  புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற  உள்ளது.  இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான  நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை  கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்களும், மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும்  பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment