‘102’ தாய் சேய் நல வாகன சேவைக்கு 15 புதிய வாகனங்கள்



தாய் சேய் நல வாகன சேவைத் திட்டத்தின் பயன்பாட்டுக்காக 15 புதிய ஊர்திகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்தி:-

தாய்மார்களையும்,சேய்களையும் மருத்துவமனைகளில் இருந்து பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு அழைத்துச் செல்லவும், உடல் நலம் குன்றிய பெண்கள், அவர்களது குழந்தைகளை அழைத்துச் செல்லவும் தாய்-சேய் நல வாகன சேவைத் திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது இந்தத் திட்டத்தின்கீழ், 146 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதன் வாயிலாக இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 205 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் 15 புதிய வாகனங்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment