மீமிசல் தபால் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஆதார் சேவை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வருகிற பிப்ரவரி 2-ம் தேதி (02-02-2026) முதல் தொடங்கப்பட உள்ளது.
இப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஏற்கனவே ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் ஆதார் தொடர்பான பணிகளுக்காகப் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்ற மையங்களுக்குச் சென்று வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தற்போது மீண்டும் இச்சேவை தொடங்கப்பட உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் தங்கள் புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், செல்போன் எண் இணைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் இங்கேயே மேற்கொண்டு பயன் பெறலாம்.
ஆதார் சேவை பெற வருபவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் (Original Documents) தபால் நிலையத்தை அணுகுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அரிய வாய்ப்பை மீமிசல் பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: கேப்டன் யூசுப்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.