14-வது ஆசிய நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் 20 கிலோமீட்டர் பந்தய தூரத்தை ஜப்பான் வீரர் தோஷிகாஜூ யமானிஷி 1 மணி 17 நிமிடம் 15 வினாடிகளில் முதலில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் கே.டி.இர்பான் இலக்கை 1 மணி 20 நிமிடம் 57 வினாடிகளில் எட்டி 4-வது இடத்தை பிடித்தார். பதக்கம் வெல்ல தவறினாலும் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கேரளாவைச் சேர்ந்த தேசிய சாதனையாளரான 29 வயதான கே.டி.இர்பான், தடகளத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார். ஒலிம்பிக் நடைப்பந்தயத்திற்கு தகுதி இலக்கு நேரமாக 1 மணி 21 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை தகுதி பெறுவதற்கான காலஅவகாசம் ஆகும்.
இதே ஆசிய போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தேவிந்தர் சிங் (1 மணி 21 நிமிடம் 22 வினாடி), கணபதி கிருஷ்ணன் (1 மணி 22 நிமிடம் 12) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் உலக நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சவும்யா பேபி 1 மணி 36 நிமிடம் 08 வினாடிகளில் இலக்கை அடைந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.